பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படம் மதுர வீரன். ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கி உள்ளார். சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார். சண்முக பாண்டியனுடன் புதுமுகம் மீனாட்சி, சமுத்திரகனி, வேல ராமமூர்த்தி, பால சரவணன், மைம் கோபி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தில் நடித்திருப்பது பற்றி அறிமுக நடிகை மீனாட்சி கூறியிருப்பதாவது:
என்னுடைய சொந்த ஊர் ஆலப்புழா, நடிப்பை பற்றி பெரிதாக புரிதல் இல்லாத குடும்ப பின்னணியில் இருந்து வந்தவள் நான். என்னை மதுரவீரன் திரைப்படத்தின் கதாநாயகியாக தேர்ந்தெடுத்த இயக்குனர் பி.ஜி.முத்தையாவுக்கு நன்றி. எப்போதும் முகத்தில் புன்னகையுடன் இருப்பார். படப்பிடிப்பு தளத்துக்கு வரக்கூடிய முதல் நபரும் அவர் தான். அவர் படத்தின் ஒளிப்பதிவாளரா அல்லது இயக்குநரா? என்ற சந்தேகம் எனக்கு பலமுறை வந்துள்ளது. பன்முக திறமை கொண்டவர் அவர். அவரோடு இப்படத்தில் பணியாற்றியது சிறப்பாக இருந்தது.
சண்முகபாண்டியன் எளிமையானவர், மிகப்பெரிய குடும்பத்திலிருந்து வந்தாலும் எப்போதும் எல்லோரிடமும் சாதரணமாக பழகுபவர். அவர் மிகவும் நேர்மையானவர். படப்பிடிப்பில் வசனங்களை சரியாக பேச எனக்கு உதவியவர் அவர் தான். இன்னும் சொல்லப்போனால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் எனக்கு தமிழ் பேசவும், படிக்கவும் கற்றுக் கொடுத்தார். என்னுடைய வாழ்கையில் மிகசிறந்த தருணம் விஜயகாந்த் - பிரேமலதா படப்பிடிப்பு தளத்துக்கு வந்து என்னுடன் 1 மணி நேரம் பேசியது தான்.
தமிழகத்தின் பசுமையான கிராமங்கள் என்னை அழகாக்கி, நிறைய கற்று தந்துள்ளது. கிராமத்து பெண்கள் சேலை அணிவதில் ஆரம்பித்து பலவற்றை எனக்கு கற்று தந்துள்ளனர். கிராமத்து பெண்கள் சேலை அணிவது எனக்கு மிகவும் பிடிக்கும். மதுரவீரன் படத்தின் படபிடிப்பில் அவர்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தனர் என்றார் மீனாட்சி.