அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நடிகர் விமல் தற்போது மன்னர் வகையறா என்ற படத்தை சொந்தமாக தயாரித்து நடித்துள்ளார். இந்தப் படம் நாளை வெளிவருகிறது. இந்த நிலையில் இந்தப் படம் தயாரித்த வகையில் கொடுத்த பணத்தை மோசடி செய்து விட்டதாக விமல் மீது சாலிகிராமத்தை சேர்ந்த பி.ஏ.கணேசன் என்பவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
நான் கடந்த 3 ஆண்டுகளாக படத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். ஜி.கே.ஸ்டூடியோ என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறேன். நடிகர் விமலுடன் இணைந்து ஜி.கே.ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் 'மன்னர் வகையறா' என்ற பெயரில் புதிய படம் தயாரித்துள்ளோம். அந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் விமல் நடித்துள்ளார். குடியரசு தினத்தன்று படம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் எனது பெயர் இல்லை.
மன்னர் வகையறா படம் தயாரிக்க நான் ரூ.1.75 கோடி கொடுத்துள்ளேன் . எனக்கு ரூ.2.15 கோடி, படம் வெளியானவுடன் தர வேண்டும், என்ற ஒப்பந்தம் உள்ளது. ஆனால் என்னை ஓரங்கட்டி விட்டு படத்தை வெளியிட முயற்சி நடக்கிறது. என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள். நடிகர் விமல் உள்ளிட்ட 3 பேர் எனக்கு தர வேண்டிய பணத்தை தராமல் மோசடி செய்யப்பார்க்கிறார்கள். உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு தர வேண்டிய பணத்தை வசூலித்து தரும்படி வேண்டுகிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.