ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'மெர்சல்' படம் இன்று 100வது நாளைத் தொடுகிறது. அதற்குக் காரணமான அந்த சில பேர்களுக்குத்தான் விஜய்யும், படக்குழுவினரும் நன்றி சொல்ல வேண்டும். 2017ம் வருடம் அக்டோபர் 18ம் தேதி வெளியான 'மெர்சல்' படம் உடனடியாக டிமானிட்டைசேஷன், ஜிஎஸ்டி வசன சர்ச்சையைக் கிளப்பியது. அதனால் எழுந்த கடும் எதிர்ப்புகளை அடுத்து படம் பற்றி மிகப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் ஊடகங்கள் படத்தைப் பற்றியும், அந்த சர்சசைக்குரிய வசனம் பற்றியும் செய்திகளை வெளியிட்டன.
செலவில்லாமல் கிடைத்த அந்த விளம்பரங்களால் 'மெர்சல்' படத்தைப் பலரும் பார்க்க பெரும் ஆர்வம் காட்டினர். அதனால், படம் வசூல் ரீதியில் பெரிய வெற்றியைப் பெற்றது. படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஆகியோருக்குப் பெரிய லாபம் என்று சொன்னாலும், தயாரிப்பாளர் நஷ்மடைந்துதான் இருக்கிறார் என்று கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். ஆனால், படத்தின் உண்மை வசூல் என்ன என்பதை தயாரிப்பாளர் தரப்பில் வெளிப்படையாகத் தெரிவித்தால்தான் இந்த வசூல் சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வரும்.
படம் இன்று வெற்றிகரமாக 100வது நாளைத் தொட்டிருக்கிறது. சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் ஒரே ஒரு மதியக் காட்சி மட்டும் ஓடிக் கொண்டிருப்பதாக 100வது நாள் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார்கள். இப்போதெல்லாம் எந்த பெரிய ஹீரோ படங்களும் இரண்டு வாரங்களைத் தாண்டுவதே பெரிய விஷயமாக இருக்கிறது. மேலும், 'மெர்சல்' படம் கடந்த பொங்கலன்று டிவியிலும் ஒளிபரப்பானது. அதன் பின்னும் 100வது நாளைத் தொட்டிருக்கிறது என்றால் ஆச்சரியம்தான்.
விஜய்யின் மார்க்கெட்டை மேலும் உயரத்திற்கு 'மெர்சல்' கொண்டு போயிருக்கிறது என்பதுதான் உண்மை.