டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விக்ரம் பிரபு, நிக்கி கல்ரானி, பிந்து மாதவி, சூரி மற்றும் பலர் நடிக்கும் 'பக்கா' படத்தின் டீசர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் படத்தின் கதாநாயகன் விக்ரம் பிரபு கலந்து கொள்ளவில்லை. அவருக்காக வெகு நேரம் படக்குழுவினர் காத்திருந்தார்கள். அவர் டிராபிக்கில் மாட்டிக் கொண்டார், வந்து கொண்டிருக்கிறார், வந்துவிடுவார் என்று பேசிக் கொண்டார்கள். ஆனால், கடைசியில் அவர் இல்லாமலேயே நிகழ்ச்சி ஆரம்பமானது. அதன் பிறகாவது அவர் வருவார் என்று எதிர்பார்த்திருந்தார்கள். அவர் கடைசி வரை வரவேயில்லை.
நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகி நிக்கி கல்ரானி, விக்ரம் பிரபுவின் ஷுட்டிங் முடிய நேரமாகிவிட்டதால் வர முடியவில்லை என எனக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார் என்று மொபைல் போனிலிருந்து படித்தார். அதில் படத்தின் இசையமைப்பாளரைப் பற்றியும், நிகழ்ச்சிக்கு வர முடியாததால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் மட்டுமே கூறியிருந்தார்.
பொதுவாக, இது போன்ற நிகழ்ச்சிகளில் படத்தின் நாயகிகள் தான் வர மாட்டார்கள். அதைப் பற்றி யாரும் கவலைப்படவும் மாட்டார்கள். படத்தின் நாயகன் இல்லாமல் எந்த விழாவும் நடைபெறாது. அவரிடம் ஒப்புதல் வாங்கிய பிறகுதான் விழாவையே நடத்துவார்கள்.
'பக்கா' விழாவிலும் விக்ரம் பிரபுவிடம் ஒப்புதல் வாங்கியிருந்தும் அவர் வராதது அன்று சலசலப்பை ஏற்படுத்தியது. விசாரித்துப் பார்த்ததில் படத்தில் தயாரிப்பாளர் சிவகுமார் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளாராம். அதன் காரணமாக படப்பிடிப்பு சமயத்திலேயே விக்ரம் பிரபு கருத்து வேறுபாடு கொண்டிருந்தார் என்கிறார்கள். அதனால் தான் அவர் நிகழ்ச்சிக்கு வரவில்லையாம். இனிமேலும், அவர் 'பக்கா' படத்தின் பிரமோஷனுக்கு வருவாரா என்பது சந்தேகம் என்கிறார்கள்.