மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி |
இசை அமைப்பாளர் இளையராஜா நேற்று திருப்பதி சென்றார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்தார். அவரை வரவேற்ற தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்து கொடுத்தனர். தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் வழங்கினார்கள்.
திருப்பதிக்கு இளையராஜா வந்திருப்பதை அறிந்த பத்திரிக்கையாளர்கள் அவரை பேட்டிகாண காத்திருந்தனர். தரிசனம் முடித்து திரும்பிய இளையராஜாவிடம் ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம், வைரமுத்துவின் ஆண்டாள் பிரச்சினை. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இளையராஜா பாடலை பாட விதித்த தடை உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பினார். ஆனால் இளையராஜா எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் பத்திரிக்கையாளர்களை புறக்கணித்து விட்டுச் சென்றார். இதனால் பத்திரிகையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். வழக்கமாக திருப்பதி வரும் இளையராஜா ஆன்மீகம் தொடர்பான விஷயங்களையாவது நிருபர்களுடன் பேசுவார். இந்த முறை எதுவும் பேசாமல் கோபத்துடன் சென்றது பத்திரிகளையாளர்களை ஆச்சர்யப்பட வைத்தது.