தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கேரளாவில் போலீஸாரால் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்த தனது தம்பியின் மரணத்திற்கு நீதிகேட்டு தலைமைச்செயலகம் முன்பாக ஸ்ரீஜித் என்பவர் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.. ஆனால் இரண்டு வருடங்களாக பெரிதும் கண்டுகொள்ளப்படாமல் இருந்த இவரது போராட்டம் சமீபகாலமாக சோஷியல் மீடியா மூலம் கவனம் பெற்றுள்ளது.
குறிப்பாக மலையாள நட்சத்திரங்களான பிருத்விராஜ், நிவின்பாலி, பார்வதி, இந்திரஜித், கீது மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் ஸ்ரீஜித்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கடந்த சில நாட்களாக தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் 'தோழா', பெங்களூர் நாட்கள்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள மலையாள இசையமைப்பாளர் கோபிசுந்தர், ஸ்ரீஜித்துக்கு ஆதரவாக 'ஜஸ்டிஸ் பார் ஸ்ரீஜித்' என்கிற ஆந்தம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப்பாடல் மூலம் கிடைக்கும் தொகையை ஸ்ரீஜித்துக்கு வழங்க இருப்பதாகவும் கூறியுள்ளார் கோபிசுந்தர்.