ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் கத்தி. இந்த படத்தில் வில்லனாக நடித்தவர் இந்தி நடிகர் நீல்நிதின் முகேஷ். இவர் தற்போது பிரபாஸின் சாஹோ படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகி வரும் இந்த படத்தில் முந்தைய படங்களை விடவும் பிரமாண்ட வில்லனாக நடித்துக்கொண்டிருக்கிறார் நீல்நிதின் முகேஷ்.
பிரபாசுடன் சாஹோ படத்தில் நடிப்பது பற்றி அவர் கூறுகையில், பாகுபலி நாயகன் பிரபாசுடன் நடிப்பது சவாலாக உள்ளது. அவருக்கு ஈடு கொடுத்து நடிக்க வேண்டும் என்பதற்காக நிறைய ரிஸ்க் எடுக்கிறேன். குறிப்பாக, சண்டைக்காட்சிகளில் நிறைய சாகசங்கள் செய்ய வேண்டியதிருந்தது. அதனால், இதுவரை எந்த படத்திற்கும் எடுக்காத ரிஸ்க் எடுத்து கஷ்டப்பட்டு நடித்து வருகிறேன்.
அதோடு, தமிழ், தெலுங்கு எனக்கு தெரியாத மொழிகள் என்றபோதும் சரியாக வார்த்தைகளை உச்சரித்து நடித்துக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் சாஹோ படம் எனக்கு எல்லா வகையிலும் சேலஞ்சிங்கான படமாக அமைந்துள்ளது. அதோடு, தெலுங்கில் நான் அறிமுகமாகும் இந்த சாஹோ படம் அதிரடி வில்லனாக என்னை வெளிப்படுத்தப்போகிறது என்கிறார் நீல் நிதின் முகேஷ்.