இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நாயகனாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். அவர் நடித்துள்ள 9வது படம் நிமிர். பிரியதர்ஷன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இது அவருக்கு 93-வது படம். தமிழில் கோபுரவாசலிலே படம் தொடங்கி சினேகிதியே, லேசா லேசா, காஞ்சிவரம், சில சமயங்களில் படங்களைத் தொடர்ந்து இந்த நிமிர் படத்தை இயக்கியிருக்கிறார் பிரியதர்ஷன். இப்படம் ஜனவரி 26-ந்தேதி திரைக்கு வருகிறது.
உதயநிதி ஸ்டாலினுடன் நமிதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி, டைரக்டர் மகேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த நிமிர் படத்தின் ஆடியோ விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.
அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பிரியதர்ஷன் இயக்கத்தில் நடித்திருப்பதை பெருமையாக நினைக்கிறேன். இந்த படவேலைகளில் இறங்கியபோது படத்துக்கு வசனம் எழுதியுள்ள சமுத்திரகனியிடம் யாரை இந்த கதையில் நாயகனாக நடிக்க வைக்கலாம் என்று கேட்டபோது, அவர் ஒரு பத்து நடிகர்களின் பெயரை சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் அதில் யாரையும் செலக்ட் பண்ணவில்லை. பின்னர் எனது பெயரை பிரியதர்ஷன் சொல்லியிருக்கிறார். ஆனால் நான் நடித்த ஒரு படத்தைகூட பிரியதர்ஷன் சார் பார்த்ததில்லையாம்.
இருப்பினும் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்திற்கு என்னை நாயகனாக்கியிருக்கிறார். முதல்நாள் படப்பிடிப்பிற்கு செல்லும்போது ரொம்ப பயந்தேன். ஆனால் அவர் திட்டினால்கூட சிரித்துக்கொண்டே திட்டினார். ஒரு குழந்தையிடம் வேலைவாங்குவது போன்று இந்த படத்தில் நடிக்க வைத்தார். அதோடு சினிமாத்தனம் இல்லாத ஒரு சினிமாவை எடுத்துள் ளார். அந்த அளவுக்கு யதார்த்தமான படம் இந்த நிமிர். அவருடன் ஒர்க் பண்ணியது ரொம்ப நல்ல அனுபவமாக அமைந்தது. தொடர்ந்து பிரியதர்ஷன் இயக்கும் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். அடுத்தபடியாக அவர் இயக்கும் படத்தில் என்னை ஹீரோவுக்கு பிரண்டாக நடிக்க அழைத்தாலும் நடிப்பேன்.
மேலும், இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள சமுத்திரகனிக்கும், எனக்குமிடையே ஒரு சண்டை காட்சி உள்ளது. ஒருநாளில் படமாக்கி விடுவதாக சொன்ன அந்த காட்சியை மூன்று நாட்களாக படமாக்கினார்கள். இரண்டு பேருமே உடம்பில் நிஜ அடி விழாமல் நடித்தோம். அதோடு, டைரக்டர் மகேந்திரன் எனது அப்பாவாக நடித்துள்ளார். அவர்தான் இந்த படத்திற்கு நிமிர் என்று தலைப்பு வைத்தார். தெறி படத்திற்கு பிறகு நல்ல கதைகளை மட்டுமே செலக்ட் பண்ணி நடித்து வரும் அவர், இந்த படத்தின் கதை பிடித்ததால் நடித்தார்.
ஆக, நிமிர் என்ற இந்த ஒரு படத்தில் மகேந்திரன், பிரியதர்ஷன், சமுத்திரகனி என மூன்று இயக்குனர்களுடன் பணியாற்றியிருக்கிறேன் என்கிறார் உதயநிதி ஸ்டாலின்.