ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்நாட்டில் ரஜினியும், கமலும் அரசியலில் களமிறங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டார்கள். அதற்கான வேலைகளையும் தொடங்கி விட்டார்கள். இதேபோன்று கர்நாடக அரசியலில் பிரகாஷ்ராஜ் களமிறங்குவார் என தெரிகிறது.
பொதுவாக தமிழ்நாடு, ஆந்திரா போன்று கர்நாடக மக்கள் சினிமா நடிகர்களை அரசியல்வாதிகளாக ஏற்பதில்லை. கர்நாடக சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை ரசிகர்கள் தெய்வமாக கொண்டாடுவார்கள். ஆனால் அவரே அரசியலுக்கு வருதை அந்த மாநில மக்கள் விரும்பவில்லை.
ஆனால் இன்றைக்கு நிலைமை மாறியிருக்கிறது. அமைதியாக இருந்த பிரகாஷ்ராஜ் அரசியல் பேச ஆரம்பித்தது, அவரது தோழியும், பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட பிறகுதான். இந்த விஷயத்தில் அவர் பிரதமரையே "என்னை விட மோடி சிறந்த நடிகர்" என்று விமர்சித்தது கர்நாடக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
"எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை. ஆனால் என்னை அரசியலுக்குள் இழுத்து விடுவார்கள் போலிருக்கிறது" என்ற அண்மையில் பிரகாஷ்ராஜ் கூறியிருந்தார்.
அண்மையில் கர்நாடக மாநிலம் சிர்சி நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ்ராஜ், அந்த பகுதியை சேர்ந்த உத்தர கண்டா தொகுதி பாரதிய ஜனதா எம்.பியும் மத்திய அமைச்சருமான அனந்த குமார் ஹெக்டேவை கடுமையாக விமர்சித்தார். இதனால் கோபம் அடைந்த அவரது ஆதரவாளர்கள் பிரகாஷ்ராஜ் பேசிய இடத்தை சுற்றி பசுவின் கோமியத்தை தெளித்து சுத்தமாக்கினர்.
இதனை தனது பேஸ்புக்கில் கிண்டலடித்துள்ள பிரகாஷ்ராஜ் "நான் செல்லும் இடங்களில் எல்லாம் இப்படி சுத்தம் செய்வார்களா?" என்று கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல்வாதியாக பிரகாஷ்ராஜ் உருவாகி வருகிறார் என கூறப்படுகிறது.