'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி சிம்மாசனத்துடன் உயர்ந்து இருந்தவரும், பின்னர் அரசியல் உலகிலும் தனக்கென தனி சாம்ராஜ்யத்தைப் படைத்துக் கொண்டவருமான எம்ஜிஆரின் 102வது பிறந்த நான் இன்று அவருடைய ரசிகர்களாலும், தொண்டர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இணைய உலகம் வளர்ச்சி பெறுவதற்கு முன்பு பல சிறிய ஊர்களில் இருந்த 'டென்ட்' தியேட்டர்களுக்கும் எம்ஜிஆரின் படங்கள் ஒரு நிரந்தர வருமானத்தைப் பெற்றுக் கொடுத்து வந்தது. இப்போது கால மாற்றத்தில் 'டென்ட்' தியேட்டர்கள் இல்லாமல் போனாலும், எம்ஜிஆர் நடித்த படங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
'ஆயிரத்தில் ஒருவன், அடிமைப் பெண்' ஆகிய படங்களைத் தொடர்ந்து மேலும் பல எம்ஜிஆர் படங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக 'உலகம் சுற்றும் வாலிபன், எங்க வீட்டுப் பிள்ளை' ஆகிய படங்கள் டிஜிட்டல் மயமாகி வெளியாக இருக்கின்றன.
இதனிடையே, எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாறு 'எம்ஜிஆர்' என்ற பெயரிலேயே படமாகி வருகிறது. இன்று எம்ஜிஆரை அனிமேஷன் உருவத்தில் கொண்டு வரும் 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு' படத்தை ரஜினிகாந்த் துவக்கி வைக்க உள்ளார். அத்துடன், 'எங்க சாமி எம்ஜிஆர்' என்ற ஒரு படமும் விரைவில் ஆரம்பமாக உள்ளது.
எம்ஜிஆர் மறைந்து 30 ஆண்டுகள் ஆனாலும் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் அவர் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். கட்சி வேறுபாடுகளைக் கடந்து அவரது படங்களை இன்றும் டிவியில் ரசிப்பவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். அதனால்தான், அவருடைய படங்கள் மீண்டும் டிஜிட்டல் வடிவில் வரும் போது கணிசமான வசூலைப் பெறுகின்றன. அது இன்னமும் தொடரத்தான் போகிறது.