பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
சினிமாவில் வாரிசு கலாச்சாரம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. சமீபகாலமாக அது அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதிலும் தற்போதைய முன்னணி நடிகர்களின் குழந்தைகள், குழந்தை நட்சத்திரமாகவே நடிக்க தொடங்கி உள்ளனர்.
விஜய் மகன் ஏற்கெனவே வேட்டைக்காரன் என்ற படத்தில் அறிமுகமாகி அப்பாவுடன் நடனமும் ஆடிவிட்டார். ஜெயம்ரவியின் மகன் ஆரவ், டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவியின் மகனாகவே நடித்து உள்ளார். இருவருக்கும் அதில் பாடலும் இருக்கிறது. இந்த வரிசையில் இப்போது சூரியின் மகனும் நடிகராகிவிட்டார்.
அப்பா சூரியை அறிமுகப்படுத்திய சுசீந்திரனே சூரியின் மகன் சர்வானையும் அறிமுகப்படுத்துகிறார். சுசீந்திரன் தற்போது இயக்கி வரும் ஏஞ்சலினா படத்தில் சூரி மகன் சர்வான் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதுகுறித்து சுசீந்திரன் கூறியதாவது:
சூரி மகன் சர்வானை எனக்கு சின்ன குழந்தையில் இருந்து தெரியும். அவனது துறுதுறுப்பு எனக்கு பிடிக்கும். எப்படியோ யாராவது அவனை நடிக்க வைக்கத்தான் போகிறார்கள். அதற்குள் நாம் முந்திக் கொள்வோம் என்று முடிவு செய்து ஏஞ்சலினாவில் நடிக்க வைத்து விட்டேன். சர்வானும், சூரியும் இணைந்து நடித்திருக்கிறார்கள். எனக்கு குழந்தைகளை நடிக்க வைப்பது மிகவும் பிடிக்கும், மனதுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். சூரி மகனை அறிமுகப்படுத்தியதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. அவனது படிப்பு கெடாத வகையில் அவன் தொடர்ந்து நடிக்கலாம் என்பது என் கருத்து என்றார்.