நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரே நடிகரை வைத்து ஐந்து படங்கள் இயக்கியுள்ளார் என்றால் அது இயக்குனர் ரஞ்சித் சங்கர் மற்றும் நடிகர் ஜெயசூர்யா ஆகிய இருவரின் கூட்டணி தான்.. மிகவும் உணர்வுப்பூர்வமான படங்களை இயக்குவதில் தேர்ந்தவரான இவர், கடந்த 15 மாதங்களில் மட்டுமே மூன்று படங்களை ரிலீஸ் செய்துள்ளார்.
ஜெயசூர்யாவின் ஆஸ்தான இயக்குனராக கருதப்படும் இவர் பெரும்பாலும் அவரை வைத்தே படங்கள் இயக்கி வருகிறார். சமீபத்தில் பிருத்விராஜை வைத்து படம் இயக்கப்போவதாக ரஞ்சித் சங்கர் அறிவித்து பத்து நாட்கள் தான் ஆனது.
இந்த நிலையில் தற்போது ஜெயசூர்யாவின் அடுத்த படமான 'ஞான் மேரிக்குட்டி' என்கிற படத்தை இயக்குவதாக நேற்று அறிவித்துள்ளார் ரஞ்சித் சங்கர். பிருத்விராஜ் இந்த வருடம் முழுதும் பிசியாக இருப்பதால், ஜெயசூர்யாவின் படத்தை முடித்த பின்னர், பிருத்விராஜ் படத்தை இயக்குவார் என்றே தெரிகிறது.