தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அறிமுக இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடிப்பில் வெளியான த்ரில்லர் படம் துருவங்கள் பதினாறு. இப்படம் வெற்றியடைந்து, இயக்குநரான கார்த்திக் நரேனும் பேசப்பட்டார். தற்போது கார்த்திக் நரேன் தனது இரண்டாவது படமாக 'நரகாசூரன்' படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இப்படம் விரைவில் வெளியாகிறது.
இந்நிலையில் கார்த்திக் நரேன் தனது மூன்றாவது பட அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். ''எனது மூன்றாவது படம் கையெழுத்தானது! மனதுக்கு ரொம்பவும் பிடித்த ஸ்கிரிப்ட்! படம் குறித்த தகவல்கள் விரைவில்!' என்று இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.