மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
வரும் பொங்கல் ரிலீசாக இதுவரை மூன்று படங்கள் வெளியாவது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' மற்றும் விக்ரமின் 'ஸ்கெட்ச்' ஆகிய படங்களுக்காக ஹீரோக்கள் இருவரும் முழு வீச்சில் புரமோஷன் பணிகளில் கலந்துகொண்டு வருகிறார்கள்.
சூர்யா, விக்ரம் படங்களுக்கு கேரளாவிலும் நல்ல வரவேற்பு இருப்பதால், அவர்களது ஒவ்வொரு பட ரிலீஸின்போதும் கேரளாவில் தங்கள் படத்தை புரமோட் பண்ணுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். அதனால் இருவருமே நேற்று ஒரே நாளில் கொச்சியில் முகாமிட்டு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற தங்களது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்கள்..
இருவருக்குமான ரசிகர்கள் வரவேற்பால் கொச்சியில் சில இடங்களில் போக்குவரது நெரிசல் ஏற்பட்டது. சூர்யா தனி ஒரு ஆளாக தனது படத்தை புரமோட் பண்ணிய சூழ்நிலையில், 'ஸ்கெட்ச்' படத்தின் புரமோஷனுக்காக விக்ரமுடன் கதாநாயகி தமன்னாவும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.