தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விக்ரம் நடிக்க சுமார் 3௦௦ கோடி ரூபாய் பட்ஜெட்டில் 'மஹாவீர் கர்ணா' என்கிற படம் இந்தியில் தயாராகவுள்ளது. மலையாளத்தில் பிருத்விராஜை வைத்து 'என்னு நிண்டே மொய்தீன்' என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த ஆர்.எஸ்.விமல் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.
முதலில் பிருத்விராஜை வைத்து மலையாளத்தில் இந்தப்படம் தயாராக இருந்தநிலையில் அது கைவிடப்பட்டு, தற்போது விக்ரமின் கைகளுக்கு வந்து சேர்ந்துள்ளது. இந்த கதையை பற்றி விக்ரமிடம் போனில் விமல் பேசியபோது, ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி, கர்ணன் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.. அதை தாண்டி இதில் என்ன வித்தியாசம் காட்டிவிட முடியும் என சந்தேகம் கேட்டாராம் விக்ரம்.
உடனே சென்னைக்கு கிளம்பிவந்த இயக்குனர் விமல், விக்ரமை நேரில் சந்தித்து, தான் கடந்த மூன்று வருடங்களாக 'கர்ணன்' குறித்து செய்துவந்த ஆராய்ச்சிகளையும், தனது திரைக்கதை பாணியையும் விரிவாக விவரித்தாராம். இது முற்றிலும் புதிய 'கர்ணன்' ஆக இருப்பதாக விக்ரமுக்கு நம்பிக்கை கிடைக்கவே, அதன்பின் தான் இதில் நடிக்கவே ஒப்புக்கொண்டாராம் விக்ரம்.