தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள அரசியல் படம் தானா சேர்ந்த கூட்டம். பொங்கலுக்கு திரைக்கு வரும் இந்த படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கும் சூர்யா, அதன்பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கிறார்.
மேலும், தானா சேர்ந்த கூட்டம் படத்தைப்பற்றி சூர்யா கூறுகையில், இந்த படம் அனைவரையும் இம்ப்ரஸ் பண்ணும். அந்த அளவுக்கு நாட்டில் பற்றி எரியும் சில அதிரடியான விசயங்களை இந்த படத்தின் கதையில் வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன். இந்த படத்திற்காக முதன்முறையாக தெலுங்கில் பேசியது நல்ல அனுபவம். தெலுங்கு ரசிகர்களையும், தெலுங்கு மொழியையும் நான் நேசிக்கிறேன்.
மேலும், இந்த படத்தில் சீனியர் கலைஞர்களான செந்தில், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன் ஆகியோருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. அவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்கிறார் சூர்யா.