ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வேலைக்காரன்' படத்தை தொடர்ந்து இப்போது பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்திற்கு 'சீம ராசா' என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் அடிபடுகிறது. ஆனால் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த படத்தின் படப்பிடிப்பும் ஏறக்குறைய 75 சதவிகிதம் முடிந்து விட்டது.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. பொன்ராம் இயக்கி வரும் படத்தின் வேலைகளை முடித்ததும் 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிகுமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
'இன்று நேற்று நாளை' படத்தை டைம் டிராவல் கதையாக சயின்ஸ் பிக்ஷ்ன் ஜானரில் இயக்கிய ரவிக்குமார், தனது அடுத்த படத்தை சயின்ஸ் பிக்ஷ்ன் ஜானரிலேயே இயக்க உள்ளார். கடந்த ஒரு வருடமாக இப்படத்தின் பிரீ புரடக்ஷன்ஸ் நடைபெற்று வருகிறது. படத்தின் பட்ஜெட்டில் 25 சதவிகிதம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செலவு.
இந்த படத்தை 50 கோடிக்கு பிசினஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். எனவே இந்தப் படத்திற்கு இசை அமைக்க, ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். 'ரெமோ, 'வேலைக்காரன்' 'சீமராசா' படங்களை தொடர்ந்து இந்த படத்தையும் தன்னுடைய நண்பர் பெயரில் சிவகார்த்திகேயனே தயாரிக்கிறார்.