நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
விமல் நடித்து, தயாரித்துள்ள படம் மன்னர் வகையறா. பூபதி பாண்டியன் இயக்கி உள்ளார். ஆனந்தி, சாந்தினி, ஜூலி, பிரபு, சரண்யா, கார்த்திக் குமார், நாசர், ஜெயபிரகாஷ், ரோபோ சங்கர், யோகி பாபு, நீலிமா ராணி, ரித்திகாக உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஜாக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடித்திருப்பதாலும், பெரிய பட்ஜெட் என்பதாலும் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்தது. தற்போது ஒருவழியாக எல்லா பிரச்சினைகளும் முடிந்து பொங்கல் பண்டிகையையொட்டி படம் வெளிவருகிறது. பொங்கலுக்கு ஏற்கெனவே சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச் படங்கள் வெளிவருவதாக இருக்கிறது. பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வருவதால் மன்னர் வகையறாவுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விமல் தியேட்டர் உரிமையாளர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பெருமதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய திரைப்பட விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் வணக்கம். உங்களில் ஒருவனாக இருந்த நான் நீங்கள் கொடுத்த அன்பின் காரணமாகவும், ஆதரவின் காரணமாகவும் இதுவரை 24 படங்களில் நடித்து விட்டேன். இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் என் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி உள்ள மன்னர் வகையறா எனது 25வது படமாகும்.
எனது இரண்டு ஆண்டு உழைப்பை இந்தப் படத்தில் கொட்டியிருக்கிறேன். இத் திரைப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது உங்கள் வீட்டு பிள்ளையாகிய என்னை அரவணைத்து பெரிய படங்களக்கு மத்தியில் திரையிடப்படும் என்னுடைய மன்னர் வகையறாவையும் உங்கள் திரையரங்கில் திரையிட்டு எனக்கு தங்களுடைய மேலான அன்பையும், ஆதரவையும் அளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடித்தில் விமல் குறிப்பிட்டிருக்கிறார்.