'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்தி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்தின் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் வினியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டதால் அவருடைய எதிர்தரப்பினர் கடும் கோபமடந்தனர்.
பைனான்சியர் அன்புன் செழியனுக்கு அவர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளதால் அதன் மூலம் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் வெளியீட்டிற்குப் பிரச்சனையை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார்கள் என கோலிவுட்டில் பரபரப்பாக இருந்தது. அதனால், 'தானா சேர்ந்த கூட்டம்' படம் பொங்கலுக்கு வருமா என் சந்தேக நிலை இருந்தது.
இதனிடையே, தொடர்ந்து நடந்த பஞ்சாயத்துக்களால் அந்த சிக்கலான சூழ்நிலையை சிலர் சேர்ந்து தணித்துள்ளார். அதனால், படம் நேற்று சென்சார் வரை சென்றது. படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு 'யு-எ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். படத்தின் வெளியீடும் பொங்கலுக்கு நிச்சயம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. பொங்கலுக்கு வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் தரப்பிலும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு வரவேற்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.