ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாகுபலி, பாகுபலி-2 படங்களுக்குப்பிறகு இந்தியா முழுக்க பரிட்சயமான நடிகராகி விட்டார் பிரபாஸ். தற்போது சாஹோ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படமும் பாகுபலி படங்களைப்போலவே தமிழ், தெலுங்கு, இநதி என மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது. அதோடு, இந்த படத்தை இந்தியிலும் மெகா ஹிட் படமாக்கி விட வேண்டும் என்பதற்காகவே, ஸ்ரத்தா கபூர், நீல்நிதின்முகேஷ், ஜாக்கி ஷெராப், மந்திராபேடி என பல ஹிந்தி பிரபலங்களை நடிக்க வைத்துள்ளனர்.
சாஹோ படத்தை முடித்ததும் நேரடி இந்தி படமொன்றில் நடிக்கவும் தயாராகிக்கொண்டிருக்கிறார் பிரபாஸ். அதற்கான கதை கேட்டு ஓகே பண்ணி வைத்துள்ள அவர், ஹிந்தி மொழியை தெரிந்து கொண்டால் நடிப்பதற்கு எளிதாக இருக்கும் என்பதால், தற்போது தீவிரமாக இந்தி பயின்று வருகிறார்.
இதுப்பற்றி பிரபாஸ் கூறியதாவது, ஹிந்தி படம் பார்க்க விரும்புவேன். நான் ஐதராபாத்தில் வசிக்கிறேன். அங்கு வசிக்கும் 60 சதவீத மக்கள் ஹிந்தி பேசுபவர்கள். பாலிவுட்டில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன. மூன்றாண்டுகளுக்கு முன்பு ஹிந்தியில் ஒரு கதையை கேட்டு ஓகே சொன்னேன். அந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சாஹோ படத்தை முடித்ததும் பாலிவுட்டில் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.