பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.கே.சந்திரசேகர் மீது சென்னை விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர், திருப்பதி கோயில் உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கை லஞ்சம் என சர்ச்சைக்குரிய கருத்தை பேசினார். இது தொடர்பாக இந்து அமைப்பு சார்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கிறிஸ்தவரான எஸ்.ஏ.சந்திரசேகர், இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. சமீபத்தில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், முகாந்திரம் இருந்தால் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என தெரிவித்தது. இந்நிலையில், பிற மதத்தினரின் உணர்வுகளை, உள்நோக்கத்துடன் புண்படுத்தும் வகையில் பேசியதாக அவர் மீது ஐபிசி 295 ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.