ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிடா என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான சாய் பல்லவிக்கு அந்த படம் பெரிய ஹிட்டாக அமைந்தது. கதைப்படி அவர் வெயிட்டான ரோலில் பெண்களை கவரும் வேடத்தில் நடித்திருந்தார். அதனால் பிரேமம் படத்தில் நடித்து பெருவாரியான இளவட்ட ரசிகர்களை கவர்ந்திருந்த சாய் பல்லவி, பிடா, எம்சிஏ படங்களுக்குப் பிறகு ஆந்திரா, தெலுங்கானாவின் பெருவாரியான பெண்களை கவர்ந்து விட்டார்.
அதையடுத்து கனம் படத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழில் கரு என்ற பெயரில் வெளியாகிறது. இதன்பிறகு சர்வானந்துடனும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் சாய்பல்லவி தமிழில், சூர்யா தனுசுடன் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இப்படி அதிரடியாக படங்களை கைப்பற்றி வரும் சாய்பல்லவி, பிடா, எம்சிஏ படங்களில் பெண்கள் மத்தியில் தனக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பெண்களை கவரக்கூடிய, கதாநாயகி வேடத்திற்கும் முக்கியத்துவமுள்ள கதைகளில் மட்டுமே நடிப்பது என்கிற கொள்கையை கடைபிடித்து வருகிறார்.