திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
நடிகர் கார்த்தியின் மக்கள் நல மன்ற திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஜீவன்குமார் (வயது27) கார் விபத்தில் பலியானார்.
ஜீவன் குமார், தன் நண்பர்கள் தினேஷ், நாகராஜ் ஆகியோருடன் சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். கார்த்தி என்பவர் காரை ஓட்டினார். தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தில் கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கீழே பாய்ந்தது. பலத்த காயம் அடைந்த நான்குபேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ஜீவன்குமார், தினேஷ் இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.
தன் ரசிகர் மன்ற நிர்வாகி விபத்தில் பலியான சம்பவத்தை கேட்ட கார்த்தி, ஜீவன் குமாரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, கதறி அழுதார். தொடர்ந்து அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய கார்த்தி, "தயவு செய்து நள்ளிரவு பயணத்தை தவிர்த்து விடுங்கள். தலைப்போகும் வேலையாக இருந்தாலும் இரவில் தூங்கிவிட்டு பகலில் பயணம் செய்யுங்கள். பயணத்தை விட உயிர் மிக முக்கியம்" என உருக்கமான வேண்டுகோள் வைத்தார்.
விபத்தில் ஜீவன் குமாருக்கு திருமணமாகி மூன்று மாதம் தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.