தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விமல் சொந்தமாக தயாரித்து நடித்துள்ள படம் மன்னர் வகையறா. விமலுடன் ஆனந்தி, சாந்தினி, பிரபு, சரண்யா, கார்த்திக் குமார், நாசர், ஜெயபிரகாஷ், ரேபோ சங்கர், யோகி பாபு, ரித்திகா, நீலிமா ராணி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பூபதி பாண்டியன் இயக்குகியுள்ளார், ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார், பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த இந்தப் படம் இப்போது வெளியீட்டுக்கு தயாராகி விட்டது, ஜனவரி மாதம் திரைக்கு வருகிறது. இது இரண்டு கிராமத்துக்கு இடையிலான மோதல் கதை. அந்த மோதலுக்குள் காதல், செண்டிமெண்ட், காமெடி கலந்து தரப்போகிறார்கள். சுருக்கமாக சொன்னால் ஹரி பாணியிலான அரிவாள் கதை.
நேற்று வெளியிடப்பட்ட 90 விநாடி டீசரில் "மண்டையில நாலு கொத்து கொத்தியாவது அவனை பைத்தியம் பிடிச்சு அலைய வைக்கிறேன்" என்கிறான் வில்லன். "வெட்டறதா இருந்தாலும் அது என் வீட்ட அருவாளாத்தான் இருக்கணு" என்று ஹீரோ வில்லன் வீட்டு முன் நிற்கிறார். "உங்க ஊர்ல பத்து பேரு அருவா எடுத்தா எங்க ஊர்ல மொத்த பேரும் அருவா எடுப்பாங்க" என்கிறார் ஹீரோ. படத்தில் அருவா வீச்சுக்கு பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது.