ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி உள்ள படம் வேலைக்காரன். மோகன் ராஜா இயக்கத்தில், ஆர்டி ராஜா தயாரித்துள்ளார். மக்களின் நலன்களில் விளையாடி, விளம்பரம் என்ற மாயை மூலம் அவர்கள் மக்களை ஏமாற்றி எப்படி பணம் சம்பாதித்து, நம்மையும் கஷ்டத்தில் தள்ளுகிறார்கள் என்பதை சொல்லும் சமூக படமாக வெளிவந்திருக்கிறது இந்த வேலைக்காரன்.
சிவகார்த்திகேயனை, இதுநாள் வரை ஒரு நகைச்சுவை கலந்த கதாநாயகனாகவே பார்த்துப் பழகிப் போன ரசிகர்களுக்கு, இந்த 'வேலைக்காரன்' கதாபாத்திரம் அவரை வேறு ஒரு கோணத்தில் இனி பார்க்க வைக்கும். சிவாவின் வழக்கமான டைமிங் காமெடிகள், குறும்புத்தனங்கள் எல்லாம் இந்தப்படத்தில் இல்லை.
முழுக்க முழுக்க சிரீயஸ் நாயகனாக நடித்திருக்கிறார். அதிலும் பக்கம் பக்கமாய் அவரை வசனம் பேச வைத்திருக்கிறார் இயக்குநர். இது சற்று சலிப்பை ஏற்படுத்தினாலும், ஹீரோ என்பவர் எப்படிப்பட்ட கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும் என்பதை உணர்ந்து ஒரு புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறார் சிவா. அது அவருக்கு 100 சதவீதம் ஒர்க்-அவுட் ஆகவில்லை என்றாலும், அவரின் இந்த புதிய முயற்சி ரசிகர்களால் வரவேற்கப்படுகிறது.