தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 8 நாட்களாக நடந்து வந்தது. இதில் 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 படங்கள் திரையிடப்பட்டது. தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவில் 8 தோட்டாக்கள், மாநகரம், அறம், மகளிர் மட்டும், தரமணி, ஒரு கிடாயின் கருணை மனு, கடுகு, குரங்கு பொம்மை, மனுசங்கடா, ஒரு குப்பை கதை, விக்ரம் வேதா, துப்பறிவாளன் ஆகிய 12 படங்கள் போட்டியிட்டன.
இதில் ஒரு கிடாயின் கருணை மனு சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. விக்ரம் வேதா படத்திற்கு இரண்டாவது இடம் கிடைத்தது. மாநகரம் படத்திற்கு சிறப்பு நீதிபதிகள் விருது கிடைத்தது. குரங்கு பொம்மை படத்தில் நடித்த பாரதிராஜவுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. விஜய் சேதுபதிக்கு அமிதாப்பச்சன் யூத் ஐகான் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளை நிறைவு விழாவில் கே.பாக்யராஜ் வழங்கினார். விஜய் சேதுபதி தனக்கு வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை சர்வதேச திரைப்பட விழாவுக்கே வழங்கினார்.