‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஜெயம்ரவி நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய படம் தனி ஒருவன். நயன்தாரா நாயகியாக நடித்த அந்த படத்தில் அரவிந்த்சாமி அதிரடி வில்லனாக நடித்திருந்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதற்கு முன்பு வரை ரீமேக் படங்களாக இயக்கி வந்த மோகன்ராஜா, முதன்முறையாக ஒரு புதிய கதையை இயக்கினார். அதையடுத்து தற்போது, சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தை இயக்கியிருக்கிறார்.
இதுபற்றி மோகன்ராஜா கூறுகையில், தனி ஒருவனுக்கு பிறகு எந்த மாதிரி படம் பண்ணலாம் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோது, சிவகார்த்திகேயன் வந்து எனக்கு தனி ஒருவன் மாதிரி ஒரு படம் பண்ணிக்கொடுங்கள் என்றார். அதுவும் தயாரிப்பாளரோடு வந்தார். அவரிடம் மூன்று கதைகள் சொன்னேன். அதில் ஒன்றை ஓகே செய்தார்.
இந்த கதை சமூகத்தைப்பார்த்து நான் கேட்க நினைத்த கேள்வி. அதாவது 20 வருடங்களாக நான் எனக்குள்ளே கேட்டுக்கொண்டிருந்த அந்த கேள்வியை இந்த வேலைக்காரன் படம் மூலம் சமூகத்திடம் கேட்கிறேன். இந்த படத்தில் ஒரு மெசேஜ் உள்ளது. இந்த படம் வெளியான பிறகு அனைவருமே இது கேட்க வேண்டிய கேள்விதான் என்று சொல்வார்கள். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
பொதுவாக, நான் எனது படத்தை இயக்கிக்கொண்டிருக்கும்போது வேறு படங்களை பார்க்க மாட்டேன். ஆனால் நயன்தாரா விட மாட்டார் என்பதால் அவருக்காக அறம் படத்தைப்பார்த்தேன். நல்ல படம், பிரமாதமாக நடித்திருந்தார். அவருக்குள் இவ்வளவு திறமை இருந்ததினால்தான் சினிமாவில் நீண்டகாலம் நிலைத்து நின்று கொண்டிருக்கிறார். அப்படியொரு நடிகை எனது வேலைக்காரனில் நடித்திருப்பது பெருமையான விசயம் என்கிறார் மோகன்ராஜா.