விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
பிரபல ஹிந்தி நடிகையான ஸ்ரத்தா கபூர், தற்போது பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு முதல் தெலுங்கு படம் என்றபோதும் தெலுங்கில் தனக்குத்தானே டப்பிங் பேச முயற்சித்து வருகிறார். மேலும், சாஹோ படமும் பாகுபலி போன்று மூன்று மொழிப் படம் என்பதால் இந்த படத்திற்கு பிறகு தென்னிந்திய சினிமாவிலும் அழுத்தமாக கால்பதித்து விட வேண்டும் என்று புதியபட வேட்டைகளிலும் ஈடுபட்டுள்ளார் ஸ்ரத்தா கபூர்.
அதோடு, அவ்வப்போது டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடுவதை தொடர்ந்து வரும் ஸ்ரத்தா கபூர், சமீபத்தில் ரசிகர்களுடன் டுவிட்டரில் சாட் செய்தபோது, பிரபாஸ்-மகேஷ்பாபு குறித்து ரசிகர்கள் அவரிடம் கருத்து கேட்டனர்.
அதற்கு ஸ்ரத்தா பதில் கூறுகையில், பிரபாஸ் ஒரு சிறந்த மனிதர். ரொம்ப அன்பானவர். அதேப்போல் மகேஷ்பாபு மனதைக்கவரும் அற்புதமான மனிதர் என்றும் கூறியுள்ளார்.