ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
உலக அளவில் இந்திய சினிமா என்றாலே அது ஹிந்தி சினிமாதான் என்ற ஒரு மாயை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இந்திய நாட்டில் ஹிந்திப் படங்கள் மட்டுமே தயாராவதாக வெளிநாட்டினர் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஹிந்தி படங்கள் மட்டும் இங்கு தயாரிக்கப்படவில்லை. அதற்குப் போட்டியாக பல மொழிப் படங்களும் உருவாகி வருகின்றன என்பதை உலகுக்குப் புரிய வைத்ததில் 'பாகுபலி' படத்திற்கு மிகப் பெரிய பங்குண்டு.
'பாகுபலி, பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களும் உலக அளவில் இந்தியப் படங்களின் மீதான கவனத்தை ஈர்த்தன. தெலுங்கில் நேரடியாகத் தயாரான 'பாகுபலி' படங்கள் தெலுங்குத் திரையுலகத்தைப் பற்றி உலகம் முழுவதும் பேச வைத்துள்ளன. இந்திய அளவிலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. அப்படி நமது இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்-ஐயும் 'பாகுபலி' படம் கவனிக்க வைத்திருக்கிறது.
ஐதராபாத்தில் நேற்று நடந்த உலகத் தெலுங்கு மாநாட்டில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் 'பாகுபலி' படத்திற்கும் சேர்த்து புகழாரம் சூட்டினார். அவர் பேசுகையில், “ஐதராபாத் ஒரு மென்மையான, கம்பீரமான, “பிரியாணி, பாட்மிண்டன், பாகுபலி” ஆகியவற்றின் நகரம். நாட்டின் சுவையான உணவைத் தரும் நகரம். பாட்மிண்டன் வீரர்களை வரிசையாகத் தரும் நகரம். இந்தியாவின் மென்மையான அதிகாரத்தை வெளிப்படுத்தும் படங்களையும் கொடுக்கும் நகரம்” எனப் பாராட்டியுள்ளார்.
'பாகுபலி' படம் பற்றி ஜனாதிபதியின் பேச்சு, 'பாகுபலி' படக்குழுவினரை பெருமை கொள்ள வைத்துள்ளது.