டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் சசிக்குமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்த வழக்கில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மீது வழக்குப்பதிவு செய்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து அவர் தலைமறைவாகியுள்ளார். மேலும் முன்ஜாமின் கோரியும் மனு தாக்கல் செய்தார். பின்னர் அதை வாபஸ் பெற்றார்.
இந்நிலையில் தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் அன்புச்செழியன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தனக்கும், அசோக்குமாருக்கும் எந்த பணபரிவர்த்தனையும் கிடையாது என்றும், சசிகுமாருடன் மட்டும் தனக்கு பணபரிவர்த்தனை உள்ளது. தன் மீது தொடரப்பட்ட வழக்கு உள்நோக்கம் கொண்டது என தன் மனுவில் அன்புச்செழியன் கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட், அன்புசெழியன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததுடன், இது குறித்து ஜனவரி 29க்குள் பதிலளிக்க சசிக்குமாருக்கு உத்தரவிட்டுள்ளது.