தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் மணி சர்மாவும் ஒருவர். தெலுங்கு மட்டுமின்றி தமிழ், கன்னடத்திலும் நிறைய படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். அந்த வகையில், விஜயகாந்த் நடித்த நரசிம்ஹா படத்தில் தமிழுக்கு வந்த அவர், பின்னர் விஜய் நடித்த யூத், போக்கிரி, சுறா, தனுஷ் நடித்த படிக்காதவன், மாப்பிள்ளை விசால் நடித்த தோரணை உள்பட பல மெகா படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தமிழில் கடைசியாக நகுல் நடித்த நாரதன் படத்திற்கு இசையமைத்தார்.
தற்போதும் தெலுங்கில் சில படங்களுக்கு இசையமைத்து வரும் மணிசர்மாவின் கைவசம் உள்ள படங்களுக்கு இசையமைத்து கொடுத்து விட்டு அடுத்த ஆண்டு முதல் படங்களுக்கு இசையமைப்பதில் இருந்து விலகிக்கொள்ள முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.