‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சென்னை 28, தோழா, ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில் நடித்தவர் நிதின் சத்யா. தற்போது சேவத் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் ஜருகண்டி என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதில் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரெபா மோனிகா ஜான் நடிக்கிறார். இவர்களுடன் ரோபோ சங்கர், இளவரசு, காவ்யாஷா நடிக்கிறார்கள். அமித் குமார் திவாரி வில்லனாக நடிக்கிறார். போபோ சஷி இசை அமைக்கிறார், அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். பிச்சுமணி இயக்குகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 30 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா திடீரென படத்திலிருந்து விலகி உள்ளார். சம்பள பிரச்னை காரணமாக விலகியதாகவும், அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு இயக்குனருக்கு திருப்தியாக அமையவில்லை என்பதால் விலக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதுபற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட தயாரிப்பாளர் நிதின் சத்யா "திட்டமிட்டபடியே எங்கள் படப்பிடிப்பு துல்லியமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. எங்களது படப்பிடிப்பு குழுவில் புதிதாக இணைந்து உள்ள ஒளிப்பதிவு இயக்குனர் ஆர்.டி.ராஜசேகரின் அனுபவமும், திறமையும் எங்களை போன்ற இளைஞர்களை ஊக்குவிக்கும். அவரது தொழில்நுட்பம் உலக தரத்துக்கு இணையானது. அதுவே எங்களுக்கு பெருமை" என்று மட்டும் கூறுகிறார்.