பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
அறம் படத்தை தயாரித்த கோட்டப்பாடி ஜெ.ராஜேஷ் தயாரிப்பில், கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் குலேபகாவலி. பி.எஸ்.ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு விவேக் மெர்வின் இசையமைக்கிறார். குலேபகாவலி பொங்கல் தினத்தில் வெளியாகிறது .
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம், படம் வெளியாக உள்ள நிலையில் பிரபுதேவாவின் குலேபகாவலி படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் வெளியீட்டைத் தொடர்ந்து இதன் படப்பிடிப்புகள் துரிதப்படுத்தப்பட்டு தற்போது முடிந்துள்ளது. இதன் பின்னணி இசை கோர்ப்பு, டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. படத்தின் பாடல் முன்னோட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
"விக்கலு வந்தா தண்ணிய குடிச்சிக்கம்மா... சிக்கல் வந்தா தள்ளியே நிண்ணுக்கமா..." என்ற அறிமுக பாடலில் பிரபுதேவா தனது பழைய பாணியில் நடனமாடியிருக்கிறார். "சேராமல் போனால் வாழாமல் போவேன்..." என்ற பாடலில் அரங்க அமைப்பும், கிராபிக்சும் மிரட்டுகிறது. இணைய தளத்தில் லைக்குகளை குவித்து வருகிறது பாடல்கள்.