டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராக பதவியேற்ற பிறகு பண மோசடியில் ஈடுபட்ட முன்னாள் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். இதை எதிர்த்து முன்னாள் செயலாளர் ராதாரவி உள்ளிட்ட முன்னாள் நிர்வாகிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஆஜரான விஷால் தரப்பு "வழக்கு முடியும் வரை முன்னாள் நிர்வாகிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்" என்று உறுதி அளித்தனர்.
ஆனால் உறுதிமொழிக்கு மாறாக ராதாரவி உள்ளிட்ட சில முன்னாள் நிர்வாகிகளை புதிய நிர்வாகம் நீக்கியது. இதை தொடர்ந்து விஷால் மீது ராதாரவி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 19ம் தேதிக்குள் விஷால் கோர்ட்டில் நேரில் ஆஜராகி இதற்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.