டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தயாரிப்பாளர் சங்கத்தை தொடர்ந்து நடிகர் சங்கத்திலும் நடிகர் விஷாலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தெரிகிறது. துணை தலைவராக இருக்கும் பொன்வண்ணன், தான் ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தலில், சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட முந்தைய நடிகர் சங்க நிர்வாகிகள் செய்த முறைகேடுகளை முன் வைத்து தேர்தல் களத்தில் இறங்கிய நாசர், விஷால், பொன்வண்ணன் தலைமையிலான அணி அமோக வெற்றி பெற்றது. அதோடு அவர்கள் கொடுத்த முக்கிய வாக்குறுதியான நடிகர் சங்கம் கட்டடம் கட்டும் பணியும் விரைவாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் நடிகர் சங்க துணை தலைவராக இருக்கும் பொன்வண்ணன், தான் ராஜினாமா செய்வதாக நடிகர் சங்கத்திற்கு கடிதம் கொடுத்திருக்கிறார். தனிப்பட்ட காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்தவாரமே அவர் கடிதம் கொடுத்துவிட்டார். ஆனால் அவரின் ராஜினாமாவை நிர்வாகிகள் இன்னும் ஏற்கவில்லை. தொடர்ந்து அவரிடம் பேசி வருகின்றனர். ஆனால் பொன்வண்ணன், ராஜினாமா செய்வதில் உறுதியாக உள்ளார்.
என்ன காரணம்?
நடிகர் விஷால், நடிகர் சங்கத்தை தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் களமிறங்கி வெற்றி கண்டார். அப்போது நடிகர் சங்கத்தில் சின்ன விரிசல் விழுந்தது. இருந்தாலும் அது பெரிதாகவில்லை. இந்நிலையில், விஷால் சமீபத்தில் ஆர்கே.நகர் இடைத்தேர்தலிலும் களமிறங்கினார். அவர் வேட்புமனு நிராகரிக்கப்பட்டாலும், சங்கத்தில் அவரது செயல் பிடிக்கவில்லை. இதனால் சங்க நலன் பாதிக்கப்படும் என நிர்வாகிகள் கருதுகின்றனர்.
நடிகர் சங்கம் அரசியல் சார்பற்று செயல்பட வேண்டும் என்ற முடிவை விஷால் செயல்படாதது அதிர்ச்சி அளிப்பதாகவும், அவர் அரசியலில் போட்டியிட முடிவெடுத்தது நமது கொள்கைக்கு முரண்பாடான செயல் என பொன்வண்ணன் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக அவர் ராஜினாமா செய்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்தை தொடர்ந்து....
விஷாலின் ஆர்கே.நகர் தேர்தல் களமிறக்கம் காரணமாக, தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்னை ஏற்பட்டது. சேரன், டி.ராஜேந்தர், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஓர் அணியாக திரண்டு விஷாலை எதிர்த்து வருவதுடன், நேற்று நடந்த தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்திலும் பெரிய ரகளை ஈடுபட்டனர். இந்நிலையில், இப்போது நடிகர் சங்கத்திலும் இதை பிரச்னையை முன் வைத்து விரிசல் உருவாகி உள்ளது.
ஒற்றுமை இல்லை
தமிழ் சினிமாவில் ஏற்கனவே பல பிரச்னைகள் உள்ளது. அதையெல்லாம் ஒன்றுகூடி பேசி தீர்க்காமல், இப்படி ஒற்றுமையின்றி ஆளாளுக்கு பிரிந்து பிரச்னை செய்து வருவது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமான போக்கு அல்ல என்பதே நிதர்சனம்.