600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
எஸ்-3 படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. கார்த்தி, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அவர் இசையில் உருவான சொடக்கு மேல சொடக்கு போடுது பாடல் சூப்பர் ஹிட்டாகி படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், இந்த தானா சேர்ந்த கூட்டம் படம் தெலுங்கில் கேங் என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது அவர் சில புதுவரவு இயக்குனர்களிடமும் கதை கேட்டு வருகிறார். அதில் சந்தீப்கிஷன் நடித்த மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் சொன்ன கதை சூர்யாவை இம்ப்ரஸ் பண்ணியுள்ளதாம். அதையடுத்து அவரது இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.