டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கலைப்புலி தாணுவுக்கு ஒருவரைப் பிடித்துவிட்டால் போதும், அவரை நன்றாக புரமோட் பண்ணுவார். தாணுவின் குட்புக்கில் இருப்பவர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர். 'கலைப்புலி' எஸ்.தாணு தயாரிப்பில் விக்ரம் பிரபு ஏற்கெனவே 'அரிமா நம்பி' என்ற படத்தில் நடித்துள்ளார்.
அந்தப்படம் பரபரப்பாக பேசப்பட்i அளவுக்கு பணத்தை சம்பாதித்துக் கொடுக்கவில்லை. ஆனாலும் விக்ரம் பிரபுவை வைத்து புதிய படத்தை ஆரம்பித்துவிட்டார். சமீபத்தில் வெளியான 'இந்திரஜித்' படத்தை தொடர்ந்து 'கலைப்புலி' எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தான் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார்.
அறிமுக இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கும் இந்த படத்திற்கு 'துப்பாக்கி முனை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 'துப்பாக்கி முனை'படத்தின் ஒளிப்பதிவை ராசாமதி கவனிக்க, எல்.வி.முத்துகணேஷ் இசை அமைக்கிறார்.
'துப்பாக்கி முனை' படத்தின் தலைப்புக்குக் கீழே 'Each Bullet has a story' என்ற டேக்லைன் இடம்பெற்றுள்ளது. இதன் அர்த்தம் என்ன? ஏற்கெனவே தாணு தயாரிப்பில் சூர்யா நடித்த 'காக்க காக்க' படம் போல் 'துப்பாக்கி முனை' படமும் என்கவுன்ட்டர் போலீஸ் சம்பந்தப்பட்ட கதையாம்.
தாணுவின் தயாரிப்பில் விஜய் நடித்த 'துப்பாக்கி' படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதை மனதில் வைத்தே இந்தப்படத்திற்கு துப்பாக்கி முனை என்று தலைப்பு வைத்துள்ளனர்.
யாராவது கள்ளத்துப்பாக்கி முனை என்ற தலைப்பை வைத்துவிட்டு கோர்ட்டுக்குப் போகாமல் இருக்கணும்.