'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தயாரிப்பாளர் சங்க விதிகளுக்கு எதிராக நான் செயல்படவில்லை என இயக்குநர் சேரனுக்கு, விஷால் பதிலடி கொடுத்துள்ளார். நடிகர் விஷால், ஆர்.கே.நகரில் தேர்தலில் களமிறங்கி, வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு சேரன் உள்ளிட்ட சில குறிப்பிட்ட தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை, அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆர்.கே.நகரில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால்...
மக்களின் பிரச்னைகளை முன்னிறுத்தி, அடிப்படை பிரச்னைகளை கையிலெடுத்து ஆர்கே.நகரில் ஓட்டு சேகரிக்க உள்ளேன். அந்த தொகுதி மக்கள், அடிப்படை வசதிகளை தான் எதிர்பார்க்கின்றனர். அவர்களின் பிரதிநிதியாக இருக்கவே நான் விரும்புகிறேன். நடிகர் என்பதால் தேர்தலில் நிற்க கூடாது என்கிறார்கள். நடிகர் சங்க தேர்தலில் நின்றபோதும், தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் நின்றபோதும் இதே மாதிரி பிரச்னை செய்தார்கள். அதையெல்லாம் மீறி நாங்கள் ஜெயித்தோம்.
இது ஜனநாயக நாடு, சட்டத்தை மீறி நான் எதுவும் செய்யவில்லை. தயாரிப்பாளர்கள் சங்க விதிகளையும் நான் மீறவில்லை. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தின் பிரச்னைகளை தீர்த்து வருகிறோம்.
இவ்வாறு விஷால் கூறினார்.