ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வளர்ந்து வரும் பின்னணி இசை பாடகி நமீதா பாபு. சண்டிவீரன் படத்தில் இடம்பெற்ற அலுங்குறேன்... குலுங்குறேன்... பாடல் மூலம் திரையிசையில் அடியெடுத்து வைத்திருக்கும் நமீதா அதன் பிறகு திருநாள், மகளிர் மட்டும், வீரய்யன், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ளார். தற்போது அவர் இளம் பாடகிகளை உருவாக்கும் வகையில் ஒரு இசை பள்ளியை தொடங்கி உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
எனது பாடகி வாழ்க்கைக்கு கிடைத்திருக்கும் துவக்கம் மிகவும் திருப்திகரமாக அமைந்தது. சண்டிவீரன் படத்தில் அழகான பாடலோடு ஆரம்பித்த எனது பயணம் திருநாள் படத்தில் வெற்றிகரமாக தொடர்ந்தது. பிறகு மகளிர் மட்டும் படத்தில் ஜிப்ரான் அவர்கள் இரண்டு முத்தான பாடல்களை எனக்கு தந்து எனக்கு பல பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் பெற்று தந்தார் . தற்பொழுது தீரன் அதிகாரம் ஒன்று படம் தெலுங்கில் காக்கி என்ற பெயரில் ரிலீஸாகியுள்ளது. அப்படத்திலும் பாடியுள்ளேன்.
இந்த மாதிரியான அருமையான பாடல்களை தொடர்ந்து பாட விரும்புகிறேன். சிறந்த பின்னணி பாடகியாகவேண்டும் என நான் போட்டு கொண்டிருக்கும் உழைப்பு என்னை நிச்சயம் உயர்த்தும் என நம்புகிறேன். வெஸ்டர்ன் க்ளாசிக்கலில் முறையாக பயிற்சி பெற்று தேர்ந்துள்ளதால் எல்லா வகையான பாடல்களை என்னால் பாட முடியும். நிறைய இசையமைப்பாளர்களோடு இணைந்து பல அருமையான , ஹிட் பாடல்களை நான் பாட ஆவலோடு உள்ளேன் . நல்ல பாடகிகளை உருவாக்க நெஸ்பயர் ஸ்கூல் ஆஃப் மியூசிக் என்ற பெயரில் என்ற இசை பள்ளியை துவக்கி இருக்கிறேன். இசையமைப்பாளர்கள் ஜிப்ரான், ஸ்ரீகாந்த் தேவா மற்றும் எஸ்.என். அருணகிரி ஆகியோர் திறந்து வைத்தனர். என்கிறார் நமீதா பாபு.