ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பணியாற்றி வரும் நடிகர் விஷால் அடுத்த அதிரடியாக தேர்தல் களத்தில் குதிக்கிறார். நடைபெற இருக்கிற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இது சினிமா துறையிலும், அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை (டிசம்பர் 4) அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். தேர்தலில் போட்டியிடுவது குறித்து விஷால் அளித்துள்ள விளக்கம் வருமாறு:
இந்த தேர்தலில் போட்யிடுவதால் விஷாலுக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது என்று எல்லோரும் நினைக்கிறார்கள். இந்த தேர்தலில் போட்டியிடுவதால் எனக்கு அரசியல் ஆதாயம் எதுவும் இல்லை. மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும். ஒரு சாதாரண மனிதனாக மக்களின் தேவையை பூர்த்தி செய்யவே தேர்தலில் நிற்கிறேன்.
ஆர்.கே.நகர் தொகுதி பற்றி நான் நன்கு அறிவேன். 2015ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலத்தில் ஆர்.கே.நகரில் களத்தில் இறங்கி வேலை செய்திருக்கிறேன். அவர்களின் பிரச்சினைகள், தேவைகளை அறிந்து வைத்திருக்கிறேன். அந்த தொகுதியில் சாதாரண ஏழை எளிய மக்கள் அதிகம் வாழ்கிறார்கள். அவர்களின் அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படவில்லை. விளையாட்டுத்துறையில் சிறந்த இளைஞர்கள் இந்த தொகுதியில் இருக்கிறார்கள். ஆனால் அடிப்படை வசதி இல்லாமல் அவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. அந்த மக்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன் என்கிறார் விஷால்.