'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சத்ரியன், நெருப்புடா படங்களுக்குப் பிறகு பக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு. இந்த நிலையில், அடுத்தபடியாக அவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, நேற்று முன்தினம் தனது இணைய பக்கத்தில் எனது அடுத்த படம் குறித்த தகவலை நாளை வெளியிடுவேன் என்று தெரிவித்திருந்த விக்ரம் பிரபு, தான் ஒரு துப்பாக்கியுடன் நிற்கும் போட்டோவையும் வெளியிட்டிருந்தார்.
அப்படி முதல் நாளே அடுத்த படம் குறித்த டைட்டீலை சூசகமாக அறிவித்திருந்த நிலையில், நேற்று விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் பெயர் துப்பாக்கி முனை என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் அந்த படத்தை தினேஷ் செல்வராஜ் என்பவர் இயக்குகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் இந்த துப்பாக்கி முனை படத்தில் போலீஸ் ஆபீசராக நடிக்கிறார் விக்ரம் பிரபு.