'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
ஆர்கே., நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக நடிகர் விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என சினிமா சம்பந்தப்பட்ட பொறுப்புகள், பிரச்னைகளையும் தாண்டி, சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கும் குரல் கொடுப்பவர் நடிகர் விஷால். எதிர்காலத்தில் அவரும் அரசியலில் இறங்க இருப்பதாக பேசப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆர்கே., நகர் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. திமுக., சார்பில் மருது கணேஷூம், அதிமுக., சார்பில் மதுசூதனனும், டிடிவி தினகரன் தனியாகவும் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர். இவர்களோடு நடிகர் விஷாலும் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதை அதிகாரப்பூர்வாக விஷால் அறிவித்துள்ளார். திங்களன்று அவர் மனு தாக்கல் செய்ய உள்ளார்.
ஆர்.கே.நகரில் போட்டியிடுவதற்கு, தேவையான அனைத்து தகவல்களையும், விஷால், தன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் திரட்டியுள்ளார். அந்த தொகுதி சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்னைகளையும் அவர் தெரிந்து வைத்திருப்பதாகவும், அதை தீர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களையும் அவர் முன்னெடுத்து செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.