இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கலர்ஸ் என்ற குறும்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் எஸ்.பி.மோகன். இப்போது அந்த குறும்படத்தையே பஞ்சு மிட்டாய் என்ற பெயரில் திரைப்படமாக இயக்கி வருகிறார். இதனை எஸ்.கணேஷ் தயாரிக்கிறார். மா.கா.பா.ஆனந்த், நிகிலா விமல், செண்ட்ராயன், பாண்டியராஜன், தவசி உள்பட பலர் நடிக்கிறார்கள். இமான் இசை அமைக்கிறார். மாதேஷ் கே.தேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை பாகுபலிக்கு கிராபிக்ஸ் பணிகளை செய்த வி.ஸ்ரீனிவாஸ் மோகன் தலைமையிலான டீம் உருவாக்கி வருகிறார்கள். இதுகுறித்து படத்தின் இயக்குனர் எஸ்.பி.மோகன் கூறியதாவது:
இது பேண்டசி கலந்த யதார்த்த படம். புரோட்டா மாஸ்டர் மா.கா.பா ஆனந்த், அவரது மனைவி நிகிலா விமல், அவரது நண்பர் செண்ட்ராயன் ஆகியோருக்கு இடையிலான கதை. அவர்கள் நிஜவாழ்க்கையில் எளிமையானவர்கள். ஆனால் அவர்களின் கனவுலக வாழ்க்கை சுவாரஸ்யமானது. அந்த கனவுலக வாழ்க்கையை கிராபிக்ஸ் உதவி கொண்டு வடிவமைத்து வருகிறோம். பாகுபலி கிராபிக்ஸ் டிசைனர் ஸ்ரீனிவாஸ் மோகன் தலைமையிலான டீம் கடந்த ஒரு வருடமாக இதனை உருவாக்கி வருகிறார்கள். படத்தின் பட்ஜெட்டில் பாதி கிராபிக்ஸ் பணிகளுக்குத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். என்றார் மோகன்.