தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அறிமுக இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா, ஹன்சிகா மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் 'குலேபகாவலி' படம் பொங்கலுக்கு வெளியாகும் என அப்படத்தைத் தயாரித்துள்ள கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
நயன்தாரா நடிக்க சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற 'அறம்' படத்திற்குப் பிறகு இந்நிறுவனத்தின் இரண்டாவது படம் இது. நயன்தாராவின் மேலாளர் என்று சொல்லப்படும் கோட்டபாடி ஜே. ராஜேஷ் தான் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
'குலேபகாலி' படத்தின் முதல் பார்வை போஸ்டர்களில் அந்தக் கம்பெனியின் பெயர் இருக்கிறது. அப்போது அது பற்றி பலருக்கும் தெரியவில்லை. ஆனால், 'அறம்' படத்திற்குப் பிறகு அந்த நிறுவனம் பிரபலம் ஆகியுள்ளது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் பிரபுதேவா எப்படி நடித்துள்ளார் என்பதுதான் இன்றைய ஆச்சரியம்.
நயன்தாராவும், பிரபுதேவாவும் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தார்கள். பிரபுதேவாவுக்காக நயன்தாரா இந்து மதத்திற்கும் மாறினார். அதன் பின் அந்த காதல் விவகாரம் அப்படியே அமுங்கிப் போனது.