தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2017ம் ஆண்டின் முதல் நேரடித் தமிழ்ப் படத்தின் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படும் ஒரே படம் 'மெர்சல்'. படம் வெளியான பின் ஏற்பட்ட ஜிஎஸ்டி சர்ச்சையால் படத்திற்கு பல கோடிகளைச் செலவு செய்தும் கிடைக்காத இலவச விளம்பரம் கிடைத்து. அதனால், படத்தைப் பார்க்கத் தவிர்த்த பலரும் தேடிச் சென்று படத்தைப் பார்த்தனர். முந்தைய விஜய் படங்களின் வசூலை எல்லாம் முறியடித்து படம் வெற்றி பெற்றதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இதுவரை எந்த விதமான வசூல் நிலவரமும் அறிவிக்கப்படாத நிலையில் படத்தின் வசூல் 250 கோடியைத் தாண்டிவிட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவித்தன. தெலுங்கில் மூன்று வாரங்கள் கழித்து 'அதிரிந்தி' என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியானது. பெரிய வெற்றியை தெலுங்கில் பெறவில்லை என்றாலும் படத்தை வாங்கிய விலையை விட லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்தாகச் சொல்கிறார்கள்.
அக்டோபர் 18ம் தேதி தீபாவளியன்று வெளியான 'மெர்சல்' படம் 40 நாட்களைக் கடந்தும் இன்னும் சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டில் இனி வரப் போகும் படங்களும் 'மெர்சல்' வெற்றியைத் தாண்டப் போவதில்லை என்றே வியாபார வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. '2.0' படம் வெளிவரும் வரை 'மெர்சல்' சாதனை அப்படியே இருக்கத்தான் வாய்ப்புகள் அதிகம். அதை, '2.0' முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.