இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது இந்து மக்கள் முன்னணியின் மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளர். அவரது புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 22ந் தேதி நடந்த ஒரு படவிழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் உலக இந்துக்களின் புனித கோவிலான திருப்பதி கோவில் உண்டியலை லஞ்சம் பெறும் உண்டியல் என்று கிண்டல் செய்துள்ளார். இது இந்துக்களையும், இந்துக்களின் மத நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் செயலாகும். கோவில் உண்டியலில் பணம் போட்டால் பாஸாகிவிடுவாயா? என்றும் கேட்டிருக்கிறார். கிறிஸ்தவரான எஸ்.ஏ.சந்திரசேகர் இந்து மத நம்பிக்கையில் தலையிட உரிமை இல்லை. அதனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் வி.ஜி.நாராயணன்.