அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் சுஜய் கிருஷ்ணா தயாரித்துள்ள படம் சீமத்துரை. சந்தோஷ் தியாகராஜன் இயக்கி உள்ளார். கீதன், வர்ஷா பொல்லம்மா, விஜி சந்திரசேகர் உள்பட பலர் நடித்துள்ளனர். "இது என்னுடைய படம் பெயரை மாற்றி வெளியிடுகிறார்கள்" என்ற மற்றொரு தயாரிப்பாளரான இமானுவேல் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
தயாரிப்பாளர் சுஜய் கிருஷ்ணா என்பவர் என்னை அணுகி நான் ஒரு படம் தயாரிக்கப்போகிறேன். என்னால் முழு பணமும் போடமுடியாது இருவரும் இணைந்து தயாரிப்போம் என்று அழைத்தார். அவரை நம்பி ஐஜிஜே என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சீமானின் சீமாட்டி என்ற பெயரில் படம் தயாரித்தோம். இதற்காக நான் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்தேன். ஆனால் தயாரிப்பாளர் சஜய் கிருஷ்ணாவும், இயக்குனர் சந்தோஷ் தியாகராஜனும் என்னை விரட்டிவிட்டார்கள். படத்திலிருந்து விலகி கொள்ளுமாறு என்னை அடியாட்களுடன் வந்து மிரட்டிச் சென்றார்கள்.
தற்போது படத்தின் பெயரை சீமத்துரை என்று மாற்றி அவர்கள் மட்டுமே தயாரித்த படம் போன்று புதிய நிறுவனத்தின் பெயரில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். எனக்கு கொலை மிரட்டலும் விடுக்கிறார்கள். அவர்களை கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.