ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சசிகுமாரின் உறவினரும், தயாரிப்பாளருமான அசோக் குமாரின் மரணம், திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதோடு, அவரின் மரணத்திற்கு பைனான்சியர் அன்பு செழியன் தான் காரணம் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இதனால் அன்புசெழியனுக்கு எதிராக திரையுலகினர் குரல் கொடுத்து வருகின்றனர்.
அதேசமயம், அன்பு செழியன் உத்தமர் என்று டுவீட்டரில் ஆதரவு தெரிவித்துவிட்டு பின்னர் அதை தன் பக்கத்திலிருந்து நீக்கினார். இந்நிலையில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியும் அன்பு செழியனுக்கு வக்காலத்து வாங்கி உள்ளார். இதுகுறித்து விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது...
சசிகுமார் மிகவும் சிறந்த இயக்குநர் மற்றும் நல்ல மனிதர். அவரது உறவினர் அசோக்குமர் தற்கொலையை நினைத்து மன வேதனைப்படுகிறேன். அசோக்குமார் தனது மனைவி, பெற்றோர் மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு தற்கொலை செய்யும் முடிவை தவிர்த்திருக்க வேண்டும்.
நான் 6 வருடமாக அன்பு செழியனிடம் பணம் வாங்கித்தான் படங்கள் எடுத்து வருகிறேன். இதுநாள் வரையில் அவர் என்னிடம் சரியான முறையில் தான் நடந்து வருகிறார். அனைவரும் அவரை சற்று மிகைப்படுத்தி சித்தரிப்பதாக தோன்றுகிறது. திரைப்படத் துறையில் 99% தயாரிப்பாளார்கள் மற்றும் நடிகர்கள், கடன் வாங்கிப் படம் எடுத்து தான் இந்நாள் வரையில் முன்னேறி இருக்கிறார்கள்.
அசோக்குமார் மரணம் தற்கொலையில் கடைசி மரணமாக இருக்க வேண்டும். நான் தற்கொலைக்கு எதிரானவன். ஏனென்றால் தற்கொலை செய்து கொண்ட என் தந்தையால் நானும், என் தாய் மற்றும் என் குடும்பம் அனுபவித்த கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும்.
எனக்கும் கடன் இருக்கிறது, உழைத்துக் கொண்டிருக்கிறேன். அசோக்குமார் ஆத்மா சாந்தியடையட்டும்.
இவ்வாறு விஜய் ஆண்டனி தெரிவித்திருக்கிறார்.