‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சசிகுமாரின் உறவினரும், தயாரிப்பாளருமான அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு அன்புசெழியன் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இதனால் திரையுலகினர் பலரும் அன்புசெழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் குரல் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் இயக்குநர் சீனு ராமசாமியோ, அன்பு செழியன் போன்ற உத்தமர் யாரும் இல்லை என்று ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டார்.
அன்புசெழியனை பற்றி நன்று தெரிந்து இருந்தும் சீனு ராமசாமி அவருக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது. அதோடு திரையுலகினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அன்புசெழியன் உத்தமர் என்று தான் போட்ட டுவீட்டை தன் டுவிட்டர் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார் சீனு ராமசாமி.