தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மதுரை:கந்துவட்டி பிரச்னை அனைவரையும் பாதித்துள்ளது என நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கூறினார்.
கடன் பிரச்னையால் தயாரிப்பளர் அசோக்குமார் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவர் கந்து வட்டி கேட்டு அன்பு செழியன் என்பவர் மிரட்டியதால் இந்த முடிவு எடுத்ததாக கூறினார். அசோக்குமார் உடல் இன்று மதுரை வந்தது. உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் மதுரை வந்த தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கந்துவட்டி பிரச்னையால் தற்கொலை செய்து கொண்ட அசோக்குமார் மரணம் தான் கடைசி மரணமாக இருக்க வேண்டும். இது புரட்சிக்கான மரணமாகவே கருதுகிறேன். கந்து வட்டி பிரச்னையால் நான், கவுதம் மேனன், பார்த்திபன் என எல்லோரும் சிக்கியுள்ளோம். அன்புசெழியன் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்பு செழியனுக்கு ஆதரவாக அமைச்சர் , எம்.எல்.ஏ. யார் வந்தாலும் விடமாட்டோம். இனிமேல் இது போன்ற சம்பவம் நடக்க கூடாது.நடக்கவும் விட மாட்டோம். இவ்வாறு விஷால் கூறினார்